உலகில் மிகப் பெரிய குடும்பத்தின் தந்தை காலமானார்
உலகில் மிகப் பெரிய குடும்பத்தின் தந்தை என நம்பப்படும் இந்தியாவை சேர்ந்த சனா குடும்பத்தின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த பல மனைவிமாரை கொண்ட சமயப் பிரிவின் பிரதானியாக செய்றபட்டு வந்த சியோனா சனா கடந்த 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சியோனா சனாவுக்கு 38 மனைவிகளும், 89 பிள்ளைகளும், 36 பேரப் பிள்ளைகளும் உள்ளனர். சியோனா சனாவின் மறைவை மிசோரம் மாநில முதமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
76 வயதான சியோனா சனா, நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். சனா தனது வீட்டில் சுகவீனமுற்றிருந்ததாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சியோனா சனாவின் மிகப் பெரிய குடும்பம் குறித்து பல்வேறு கதைகள் இருந்து வந்துள்ளதுடன் அவர் உண்மையில் இந்த குடும்பத்தின் தலைவராக என்பது குறித்தும் பேசப்பட்டது. எது எப்படி இருந்த போதிலும் சனா குடும்பம் மிசோரம் மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க காரணமாக அமைந்துள்ளது.