கோவிட் தொற்றாளரை அழைத்து வந்த அம்புலன்ஸ் சாரதி மீது தாக்குதல்
கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கெக்கிராவ வைத்தியசாலையின் மருத்துவரும், சிற்றூழியர் ஒருவருமே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது, தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் அம்புலன்ஸ் சாரதி முறைப்பாடு செய்த பின் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.