முல்லைத்தீவில் சோகத்தை ஏற்படுத்திய சகோதரர்களின் மரணம் (Video)
முல்லைத்தீவு - வவுனிக்குளத்தில் நீராட சென்ற இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (26.04.2023) இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் யாழ். நல்லூர் யமுனா வீதி பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சுரேஷ் (27), ரவிச்சந்திரன் சுமன் (16) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பரிதாமாக உயிரிழப்பு
குறித்த இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து மரண வீடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதன்போது இரண்டு இளைஞர்களும் நீராட சென்ற நிலையில் இளைய சகோதரர் நீராடிக்கொண்டிருக்கும்போது அவர் நீரில் தத்தளிப்பதைக் கண்டு, மூத்த சகோதரர் அவரை காப்பாற்ற முற்படும்போதே இருவரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இருவரது சடலங்களையும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் வருகைதந்து பார்வையிட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
