இலங்கைக்கு கொண்டுவரப்படும் பிரியந்தவின் உடல்! செய்திகளின் தொகுப்பு
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இன்றைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
சடலம் லாஹூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என, பாகிஸ்தான், பஞ்சாப் மாநில அரசின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 124 சந்தேக நபர்களில் 13 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு.