சவூதி அரேபியா எடுத்த நடவடிக்கைக்கு நன்றி : எம்.எஸ்.தௌபீக்
சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கிய வெளிநாட்டவர்களை மீட்டெடுக்க உதவிய சவூதி அரேபியா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவரது விஷேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் 62 வெளிநாடுகளைச் சேர்ந்த 2148 பேரை மீட்டெடுக்க சவூதி அரேபியா அரசாங்கம் பல அற்பணிப்புகளை செய்து மீட்டெடுத்துள்ளது.
பாதுகாப்பான முறையில் அனுப்ப ஏற்பாடு
விஷேட விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் போரில் நிர்க்கதியான வெளிநாட்டவர்களை பாதுகாப்பான முறையில் சவூதி அரேபியாவுக்கு அழைத்து வந்து உணவு, மருந்து மற்றும் தங்குமிட வசதிகள் அனைத்தையும் சிறப்பாக கொடுத்துள்ளது.
இதுமட்டுமின்றி வெளிநாட்டு அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து தங்கள் நாடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பிவைக்க சகல விதமான ஏற்பாடுகளையும் சவூதி அரேபியா செய்து கொண்டிருக்கிறது.
மனிதாபிமான செயல்
உண்மையில் சவூதி அரேபியாவின் இந்த மனிதாபிமான செயல் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
சூடானில் நிர்க்கதியான
இலங்கையர்களையும் பாதுகாப்பான முறையில் சவுதி அரேபியாவுக்கு
அழைத்து வந்து இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார
அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை இலங்கைக்கு
அனுப்பிவைக்க சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
