திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (18 )மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந.மதிவண்ணனின் ஏற்பாட்டிலும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தலைமையிலும் இடம் பெற்றது.
இதில் பல்வேறுபட்ட எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டன.
கலந்துரையாடல்
கன்னியா வெந்நீரூற்று பகுதியை தொல்பொருள் திணைக்களத்திடம் இருந்து பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் பிரேரனையில் முன்வைத்தார்.
மாநகர அபிவிருத்தி சுற்றுலா அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் மேலும் கலந்துரையாடப்பட்டன.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மற்றும் மாநகர மேயர் க.செல்வராசா உட்பட மாநகர சபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
