தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்

Thai Pongal Sri Lankan Tamils Tamils Hinduism
By Malaivanjan Jan 14, 2026 10:16 AM GMT
Malaivanjan

Malaivanjan

in சமூகம்
Report

தமிழர்களின் பெருநாளான தை திருநாளினையும் உழவர் அறுவடை நாளினையும் கொண்டாட மலையக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

டிட்வா சுறாவளியால் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற எமது முன்னோர்களின் நம்பிக்கையினை தலையாய கடமையாக கொண்டு மலையகத்தில் வாழும் மக்கள் தமிழர்களின் பெருநாளான தை திருநாளினையும் உழவர் அறுவடை நாளினையும் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

மலையக நகரங்கள்

இதற்காக மலையக நகரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியிருந்தனர்.

இந் நிலையில் ஹட்டன் நகரில் கூடிய மக்கள் சமயத்திற்கு முன்னிரிமையளித்து பூசைக்கு தேவையான பூஜை பொருட்களையும் பொங்கல் வைப்பதற்கு தேவையான புதுப்பானை பழங்கள் பாலை கரும்பு மஞ்சள் உள்ளிட்டவைகளையும் அத்தியவசிய பொருட்களையும் வாங்கி செல்வதனை காணக்கூடியதாக இருந்தது.

இதனால் ஹட்டன் நகரத்தில் இன்றைய தினம் வர்த்தக நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்ததுடன் மக்கள் அதிகமாக வருகை தந்ததனால் நடைபாதைகளில் நெரிசல் நிலையும் காணப்பட்டன.

டிட்வா சூறாவளி

தோட்டப்பகுதியில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கி படையெடுப்பதனால் ஹட்டன் டிப்போவினால் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் ஏற்படுத்த பட்டுள்ளன.

எது எவ்வாறான போதிலும் டிட்வா சூறாவளி காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இன்னும் பல குடும்பங்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாது இடைத்தங்கல் முகாம்களில் பொங்கலினை கொண்டாட முடியாது இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே.

ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டன.

ஹட்டன்

தைப்பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஹட்டன் நகர சபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வர்த்தகர்களுக்கு ஹட்டன் நகர சபை அதிகாரிகளினால் தங்களது வர்த்தக பொருட்களை நடைபாதையிலிருந்து அகற்றுமாறு இன்று 14 திகதி பணிப்புரை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து நடைபாதையில் பழங்கள் கரும்பு,மஞ்சல் தேங்காய் மரகறிகள் விற்பனை ஈடுபட்டிருந்தவர்கள் நகர சபையில் நடைபாதை விற்பனை தடைசெய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இந்த தீர்மானங்களுக்கு எதிராக செயப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வர்தகர்களுக்கு தெரிவித்ததனையடுத்து தங்களது வர்த்த நடவடிக்கைகளை அகற்றிக்கொண்டனர்.

இதனால் நடைபாதை வர்த்தகர்கள் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தனையும் காணக்கூடியதாக இருந்தன. 

 வவுனியா

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.

வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.

தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் | Thai Pongal 2026

வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

தைப்பொங்கல் திருநாள் வியாழக்கிழமை (15.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் | Thai Pongal 2026

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் | Thai Pongal 2026

மேலதிக தகவல்- திலீபன்

 மட்டக்களப்பு

தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு நகருக்கு மக்கள் வருகைதந்து தைத்திருநாளுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவதை காணமுடிகின்றது.

தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் | Thai Pongal 2026

பொங்களுக்குரிய பொருட்கொள்வனவிலும் புத்தாடைக்கொள்வனவிலும் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டிவருவதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகையினையொட்டி மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு பிரதேசசத்திலிருந்தும் அதிகளவான மக்கள் வருகைதருவதன் காரணமாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபையினால் விசேட போக்குவரத்துகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்- குமார்

களுவாஞ்சிக்குடி 

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள பொதுச் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை நேற்றயத்தினம் புதன்கிழமை(14.01.2026) கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களைகட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும், மண்பானை, மண்சட்டி போன்ற பொங்கலுக்கான பொருட்களை கொள்வனவு செய்வதை காண முடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தெகுதியில் படுவான் கரைப் பிரதேசத்தையுமும், எழுவான் கரையையும் இணைக்கும் பிரதான நகரமாக களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறமை குறிப்பிடத்தக்கதாகும். 

தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் | Thai Pongal 2026

மேலதிக தகவல்-ருசாத்

பருத்தித்துறை

பருத்தித்துறை நகரில் பொங்கல் வியாபாரம் தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.

நத்தார் மற்றும் கிறிஸ்து புதுவருடம் என்பன இயற்கை அனர்த்தம் காரணமாக சோகை இழந்திருந்த நிலையில் இன்று தைபொங்கல் பொருட்கள் கொள்வனவில் அதிகமான மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் | Thai Pongal 2026

மேலதிக தகவல்-எரிமலை

மன்னார் 

தைப்பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் தமிழர்களின் திருநாள். இதனை முன்னிட்டு மக்கள் அரிசி, பால், வெல்லம், கரும்பு, மஞ்சள், இஞ்சி, புதிய பானைகள் பழங்கள் காய்கறிகள் புத்தாடைகள் பாத்திரங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்து பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மன்னார் நகரில் வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்ற போதும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் மன்னாரில் தைப்பொங்கல் வியாபாரம் களையிழந்துள்ளது.

தமிழர் தாயகங்களில் களை கட்டிய பொங்கல் வியாபாரம் | Thai Pongal 2026


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US