மாலியில் பயங்கரவாதிகள் நடத்திய பாரிய தாக்குதல்: 64 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குறித்த போராட்ட குழுவினர் பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து அவர்களை சுட்டுக்கொலை செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் மாலி நாட்டின் வடக்கு காவ் பாம்பாவில் உள்ள இராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர் தாக்குதல்கள்
மேலும், நைஜர் ஆற்றில் திக்புகுடு பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகினை குறி வைத்தும் தாக்குதலொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து நடந்த இந்த தாக்குதல்களில் 49 பொதுமக்கள் மற்றும் 15 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |