கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/ 2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் நேற்று(30.12.2022) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.
2022/2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கும் அரசின் கொள்கைகளுக்கு அமைவாக நேற்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன.
காலபோக நெற்செய்கை

இது தொடர்பாக கமநல அபிவிருத்தி
திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 12 ஆயிரத்து 707.2 ஹெக்டேயர்
நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்தி நானூற்று நாற்பத்தி
ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா விதம் 127.072 மில்லியன் ரூபாய்
நிதி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan