நுவரெலியா மாவட்டத்தில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு
தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கு நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜினால் திறந்து வைக்கப்பட்டது.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் (29) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள்
இதற்கமைய, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் 11ஆவதாக நுவரெலியாவில் திறக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் குறித்த இல்லம் முக்கியமாக தேவைப்படும் காரணம் வீட்டில் ஆண்கள் அல்லது வீட்டுத் தலைவர்களினால் மதுபாவனையில் அல்லது போதைப்பொருள் பாவனையில் பின்னர் ஏற்படும் வன்முறையினால் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அண்மை நாட்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதற்கான சிறந்த தீர்வாகவே குறித்த பாதுகாப்பு இல்லம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நிறுவப்பட்டு வருகின்றது இது ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள பொலிஸாரின் உதவியுடன் இயங்கி வருகிறது.
இவ் பாதுகாப்பு இல்லத்தினை நம்பி வருகின்றவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கி, வைத்திய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கி, உளநல ஆலோசனை வழங்கி மருத்துவம் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளது எனவும் இதனால் வாழும் வாழ்க்கையில் ஏதும் பிரச்சினை ஏற்படும்போது உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக வருகைத்தந்து தங்களுடைய வாழ்க்கையை வாழக்கூடியதாக அமையும்.
ஆரோக்கியமான பிரஜை
மேலும் இவ்வாறு வருகை தருகின்றவர்களுக்கு ஒரு குறுகிய காலத்தில் அவர்களுக்கான வீடுகளிலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டு அதற்கான சட்ட நடவடிக்கையும் குறித்த இல்லத்தின் ஊடாக நடைபெறும் அதன் பின்னர் அவர்கள் சமூகத்தில் ஆரோக்கியமான பிரஜையாக வாழலாம் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் , நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, நுவரெலியா மாவட்டச் அரசாங்க அதிபர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள் உள்ளிட்ட தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மேற்குறித்த தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
