பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த வருடம் ஜுலை வரை 49 பேர் கைது!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த வருடம் ஜுலை வரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்றையதினம்(05.09.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,
“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தல்
பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிப்பதாக ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அரசாங்கம் வாக்குறுயளித்திருந்தது. அமைச்சர் விஜித ஹேரத்தும் செப்டம்பரில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஹிராஜ் வீரரத்தின மற்றும் மிலிந்த ராஜபக்ச ஆகியோர் யுடியுப் தளமொன்றை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு பகுதியினருக்கு மாத்திரம் சட்டம் அவசரமாக செயற்படுவதும் சிலருக்கு தாமதமாவதும் தென்படுகிறது.
ICCPR சட்டம்
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை(ICCPR) சட்டத்தின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரின் உரையாடலில் இனங்களிடையே விரிசலை அல்லது குழப்பத்தை எடுபடுத்தும் சொற் பிரயோகங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.
குறித்த ICCPR உடன்படிக்கையில் இருக்கும் பாதகங்களை கருத்தில் கொண்டு ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு 'ரபாத்' பரிசோதனை மூலம் ஆறு காரணங்களை தெரிவித்துள்ளது. ICCPR உடன்படிக்கை முன்கொண்டு செல்வதென்றால் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



