நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு தருமாறு ரெலோ இளைஞர் அணி அழைப்பு
வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுமையான நிர்வாக முடக்கலுக்கு மக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு தேசியக் கட்சியாகிய தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிங்கள பேரினவாத அரசின் தொடர்ச்சியான அடக்கு முறையை தொடர்கிறது என்பதை முழு உலகிற்கும் அனைத்து மக்களின் வெளிப்பாடாக வெளிப்படுத்த இந்த பொது முடக்கத்திற்கு உரிமையுடன் ஒத்துழைப்பு தருமாறு அனைவரிடமும் வேண்டுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக முடக்கம்
சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் சட்டரீதியற்ற காணி அபகரிப்பு, பௌத்த மயமாக்கல், சைவக் கோவில்கள் அழிப்பு, தொல்லியல்களை மாற்றியமைத்தல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தக் கோரியும் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளப் பெறுமாறும் கோரியும் குறிப்பிட்ட நிர்வாக முடக்கலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழர் தாயகமான வடக்குகிழக்கு மாகாணங்கள் தழுவிய முழுமையான நிர்வாக முடக்கலுக்கு அனைவரையும் ஒத்துழைப்பு தருமாறு வடகிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளும் சமூக மற்றும் மத அமைப்புக்களும் கூட்டாக முடிவெடுத்து அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
