பிரான்ஸில் இளையோருக்கான தேசிய இறகுப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழ் சிறுவர்கள்
பிரான்சில் இளையோருக்கான Champion de France Badminton 2021 போட்டிகள் பிரான்சின் முல்ஹவுஸ் எனும் இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த போட்டி நிகழ்வுகள் 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் 17 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய வயது அடிப்படையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் தமிழ் சிறுவர்கள் மூன்று பேர் மிக சிறப்பாக விளையாடி காலிறுதியாட்டத்திற்குள் நுழைந்துள்ளனர்.
15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தஞ்சீவன் சண்முகராஜா ஆத்தூர் (Shanmugraja Arthur) இரட்டையர் ஆட்டத்திலும் (Doubles), 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ரவிக்குமார் ஆருஷ் Ravikumar Arush தனி நபர் (Singles) ஆட்டம் இரட்டையர் (( Doubles) ஆட்டம் ஆகியவற்றிலும், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சுரேஸ் CARNOT Dinesh இரட்டையர் ஆட்டத்திலும்,( Doubles) காலிறுதி ஆட்டத்திற்கும் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான காலிறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மூன்று சிறுவர்களின் பெற்றோர்களான சுரேஷ், ரவிக்குமார், தஞ்சீவன் ஆகியோர் ஏற்கனவே இத்துறையில் சிறப்பாக விளையாடியிருந்ததுடன், தமது பிள்ளைகளையும், இந்த வயதிலேயே ஓர் சிறப்பான நிலையை அடைந்திட பாரிய அர்ப்பணிப்பினையும் நல்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரதும் வளர்ச்சியில் உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையும் இணைந்து பேருவகை அடைவதுடன், இன்னும் பல வெற்றிப் படிகளை அடைந்திட வாழ்த்தி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.