டக்ளஸ் - ஹிஸ்புல்லாவுடன் தமிழரசுக்கட்சி இணைந்த பின் நேர்ந்த கதி
போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர் என்று கூறக்ககூடிய டக்ளஸ் தேவானந்தாவுடன் தமிழரசுக்கட்சி கூட்டிணைந்ததை எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்தேசிய அரசியல் என்பது வலியோடும் வேதனையோடும் உள்ளவர்களுக்குதான் புரியும், அதனைவிடுத்து வேறொரு இடத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களுக்கு இது புரியாது.
தனிநபர் புகழ்ச்சி பாடி தனிநபர் சொல்வதை கேட்டு நடந்தால் சில விடயங்களை சரிசெய்ய முடியாது என குறிப்பிட்டார்.
மேலும், ஹிஸ்புல்லாவுடன் தமிழரசுகட்சியின் இணைவு மற்றும் கருணா- பிள்ளையான் இணைவின் பின்னணி தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
