தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளுக்கும் நீதி அமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!
நீண்ட காலமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாழில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
34 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கை
இச் சந்திப்பில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசிகள் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 34 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ச,
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை
“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டையே பின்பற்றி வருகிறோம்.
அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
இச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும்
வடமாகாண ஆளுநரின் செயலாளர் வாகீசன் மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின்
நண்பர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.