13ஆம் திருத்தத்தை திணிக்கும் முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் துணை போகக்கூடாது: அ.யோதிலிங்கம் (Video)
பதின்மூன்றாவது திருத்தத்தை திணிக்கின்ற முயற்சிகளுக்கு தமிழ் கட்சிகள் ஒருபோதும் துணை போகக்கூடாது என சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (06.07.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த 13ஆம் திருத்தசட்டமானது இலங்கை- இந்திய அரசுகள் பேசி முடிவு செய்யப்பட்ட ஒப்பந்தம்.
இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையாது. ஆகவே இது தொடர்பாக தமிழ் கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
இந்தியா எவ்வாறாயினும் பதினொன்றாவது திருத்தத்தினை எரஸியல் தீர்வாக திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
தமிழ் நாட்டினுடைய பாரத ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் அண்ணாமலை புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று குறிப்பாக லண்டனுக்கு சென்று புலம்பெயர் தரப்புகளோடு 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசியிருக்கிறார்.
மேலும் இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது கீழ்வரும் காணொளி,