ஐநா முக்கிய ஆலோசனைக் குழு உறுப்பினராக தமிழர் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய ஆலோ சனைக் குழுவில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், ஐநாவின் புதிய உயர்மட்ட பலதரப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் உலகத் தலைவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
உலகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை குழு ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கும். இந்தப் பரிந்துரைகள் 2023ல் நடைபெறவுள்ள ஐநா உறுப்பு நாடுகள் பங்கேற்கும் உத்தேச எதிர்கால உச்சநிலை மாநாட்டில் தெரிவிக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் சபையில் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் புதிய ஆலோசனைக் குழு பற்றிய விவ ரங்களை நேற்று வெளியிட்டார். “புதிய குழுவுக்கு ஐநா பல் கலைக்கழக கொள்கை ஆய்வு நிலையம் ஆதரவு வழங்கும்,” என்று நேற்றைய அறிக்கையில் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சி னைகள் வலுவான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று திரு குட்டெரஸ் வலியுறுத்தி இருந்தார்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
