சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் - 5 மணி வரையில் பதிவாகியுள்ள நிலவரம்
தமிழகத்தில் சட்டசபை தொகுதிகளில் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
நான்காம் இணைப்பு
தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கின்ற நிலையில் பிற்பகல் 4 மணி நிலவரப்படி 54.05% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மூன்றாம் இணைப்பு
தமிழகத்தில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி 46.36% வாக்குப்பதிவாகி உள்ளது. இதுவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 48% வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை 34.67, நெல்லை 30.98%, நாமக்கல் 36.33%, திருவள்ளூர் 37.77%, கிருஷ்ணகிரி 48.00%, விழுப்புரம் 37.99%, திருநெல்வேலி 38.16%, அம்பாசமுத்திரம் 39.94%, பாளையங்கோட்டை 40.03%, நாங்குநேரி 37.39%, ராதாபுரம் 45.35% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இரண்டாம் இணைப்பு
தமிழகம் உட்பட மொத்தம் 475 தொகுதிகளில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
ஏற்கனவே காலை ஒன்பது மணி வரையான தமிழக சட்டசபைத் தேர்தல் கள நிலவரம் வெளியாகியிருந்த நிலையில் தற்போது பகல் ஒரு மணி வரையான நிலவரப்படி 40% வாக்குப்பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
தமிழகத்தில் ஒரு மணிவரையான நிலவரப்படி 40% வாக்குப்பதிவாகி உள்ளது. இதுவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 46% வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை 30.67, நெல்லை 30.98%, நாமக்கல் 34.33%, திருவள்ளூர் 36.77%, கிருஷ்ணகிரி 46.00%, விழுப்புரம் 32.99%, திருநெல்வேலி 34.16%, அம்பாசமுத்திரம் 38.94%, பாளையங்கோட்டை 38.03%, நாங்குநேரி 33.39%, ராதாபுரம் 40.35% வாக்குகள் பதிவாகி உள்ளன.
முதலாம் இணைப்பு
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தற்போது ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. 3,998 வேட்பாளர்கள் போட்டியிடும் அதேவேளை 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காலை 11 மணி வரையான நிலவரப்படி 26.29% வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
5 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்க உள்ள போதும் இறுதி ஒரு மணி நேரம் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு உயர் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.