இந்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தமிழ் எம்பிக்கள் விசேட சந்திப்பு
இந்திய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் (Nitin Gadkari) ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பானது, நேற்று (14.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை அரசியல் மற்றும் இந்திய - இலங்கை உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியாவின் உதவிகள்
மேலும், இலங்கையில் மலையக பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதை அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிதின் கட்கரி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, விரைவில் மலையக பகுதிகளுக்கு இந்திய அரசாங்கத்தின் ஊடாக பல அபிவிருத்திகளையும், சுயத்தொழில், கல்வி, விளையாட்டு உட்பட மலையக இளைஞர் யுவதிகளுக்கு இந்திய அரசாங்கத்தின் ஊடாக சுய வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
மேலும், கடும் இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியதற்காக அவர் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |