கனடாவில் மாயமான தமிழ்ப்பெண் : புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
கனடாவில் பத்து நாட்களுக்கு மேலாக தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல்போயுள்ள நிலையில்,புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கடந்த மாதம் 26ஆம் திகதி செவ்வாய் கிழமையன்று பிஞ்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் வைத்து ப்ரியா கேசவன் (65) என்ற தமிழ் பெண் ஒருவர் கடைசியாக அடையாளம் காணப்பட்ட நிலையில்,காணாமல்போயுள்ளார்.
குறித்த பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நபரொருவர் காணாமல்போனால் உடனடியாக தங்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் 24 மணி நேரத்திற்கு காத்திருக்க வேண்டியதில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.