தமிழீழ வைப்பகத்தில் இருந்து இலங்கை கைப்பற்றிய பெருந்தொகை தங்கம்! சபையில் அம்பலம்
யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை கைப்பற்றி கொண்டு வந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், எங்களது இனத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பாரிய இன அழிப்பை மேற்கொண்டது, இதற்கு எதிராக எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரன் ஆயுத போராட்டம் ஒன்றை நடத்தினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒரு நடைமுறை அரசாங்கத்தை வடக்கு - கிழக்கில் நிறுவியிருந்தார்.
நாங்களும் யுத்தம் செய்தோம், நீங்களும் யுத்தம் செய்தீர்கள். ஆனால் நீங்கள் பொருளாதார ரீதியாக அதள பாதாளத்தில் விழுந்து விட்டீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 15 மணி நேரம் முன்
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri