சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்று நானே கூறினேன்.! சுமந்திரன் பகிரங்கம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனுக்கு(S Shritharan) ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்று தான் குறிப்பிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்(M A Sumanthiran) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்சிக்குள் பிளவுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து செயற்பட்ட சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று நான் நேரடியாகவே தெரிவித்தேன். அவ்வாறு வழங்கினால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் கூறுவேன் என குறிப்பிட்டேன்.
எனினும் நியமனக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான சி.வி.கே சிவஞானம்(C V K Sivagnanam), தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கக் கூடாது என்றும், அதனால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நானும், சிறீதரனும் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதனை நியமனக் குழுவில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எனவே கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டேன்.
அதுபோன்று தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தோல்வி கண்ட எழுவருக்கு ஆசன ஒதுக்கீடு வழங்குவதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் சிறிநேசனுக்கு(Srinesan) ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதனையும் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு தான் தீர்மானங்கள் சில சமயயங்களில் விதிகளுக்கு அப்பாற்பட்டதாக காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
