புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சந்தேகநபர்களிடம் விசாரணை
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களிடமும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை - இங்கினியாகல பொலிஸ் பிரிவில் உள்ள கொக்னஹார கிராமத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருப்பதாக அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உபகரணங்கள் பறிமுதல்
இதன்போது புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை நான்கு பேரை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்த பொலிஸார் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தண்ணீர் மோட்டார், மின்சாரம் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கம்பி, ஒரு டார்ச், சங்கிலிகள் மற்றும் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
இந்த தோண்டும் பணி பல நாட்களாக நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை நான்கு பேரும் சட்ட நடவடிக்கைக்காக இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
