யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை முன்னெடுப்பு
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியிலிருந்து கைக்குண்டொன்றும், இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



