சுரேஷ் சலே அடைத்து வைக்கப்பட்ட அதே அறையில் அவர் செய்த சித்திரவதைகள்...
தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு ஒரு சாதாரண காகிதத்தாளில் உணவளித்தாலும் அதில் எவ்வித தவறும் கிடையாது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலளார் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
ஏனெனில், அதே தடுப்புக் காவல் அறைக்குள் இதைவிடப் பாரிய குற்றங்களையும் சித்திரவதைகளையும் சலே போன்ற அதிகாரிகள் செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலையில் ராஜபக்சர்களுக்கு தொடர்பு! புலனாய்வு இணையத்தளம் ஒன்றின் பரபரப்பு செய்தி..
சுரேஷ் சலே செய்த சித்திரவதைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த விவகாரத்தில் வெறுமனே ஒரு காகித ஆவணத்தை ஒப்படைப்பது மாத்திரம் முதன்மைப் பிரச்சினை அல்ல. உதய கம்மன்பில போன்றவர்கள் தடுப்புக் காவலில் சித்திரவதைகள் செய்யப்படுவதாக வெளியிடும் ஆவணங்களின் உண்மைத்தன்மை எமக்குத் தெரியாது.
ஆனால், சலேவுக்கு ஒரு சாதாரண காகிதத் தாளில் உணவளித்தாலும் அதில் தவறில்லை என்றே நாம் கருதுகிறோம். ஏனெனில், இந்த அரச நிறுவனங்களின் தடுப்புக் காவல் அறைகளுக்குள் கைதிகளுக்கு இதைவிடப் பயங்கரமான குற்றங்களையும் சித்திரவதைகளையும் சலே போன்ற அதிகாரிகளே முன்னின்று நடத்தியுள்ளனர்.

எண்பதுகளில் எமது தோழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும், வசந்த முதலிகே எவ்வாறு சிறைவைக்கப்பட்டிருந்தார் என்பதையும் நாம் அறிவோம். கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டெங்கு நோய் ஏற்பட்ட போது, அவருக்குரிய மருத்துவச் சிகிச்சைகளையோ அல்லது கஞ்சி, பால் போன்ற திரவ உணவுகளையோ வழங்க அனுமதிக்காமல் சிறை அறைக்குள்ளேயே அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர்.
அவர் கடுமையான மூச்சுத்திணறலுடன் தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அவரது முகமூடியை அகற்றக் கூட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவும் எங்களை எவ்வாறு நடத்தினார்கள், எத்தகைய கொடூரங்களை எதிர்கொண்டோம் என்பதை நாம் அறிவோம்.
இவ்வாறான மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளே இங்கு நிலவின. எனவே, அரச நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான மற்றும் வன்முறையான போக்குகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன், இவற்றுக்கு வழிவகுக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் ஒரு தீவிரவாதக் குழுவின் தலையீடு இருப்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. அதில் உள்வாங்கப்பட்டிருந்த சில நபர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டனர்.
அவ்வாறாயின், அவர்களைப் பின்னணியில் இருந்து இயக்கியது யார் என்ற பிரதான கேள்வி எழுகின்றது. இத்தாக்குதல் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், விசேட பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எவ்விதப் படியும் எடுக்கப்படவில்லை. சொகுசுப் பிரமுகர்கள் அனைவரும் அன்று பாதுகாப்பாக இருந்தனர். வழக்கமாக தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் கூட அன்று வழிபாடுகளுக்குச் செல்லவில்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் தந்தை குண்டு வெடிக்கப் போவதை முன்கூட்டியே அறிந்திருந்தார். ஆனால், தூய மனதோடு வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற அப்பாவிப் பொதுமக்களுக்கு எவ்வித எச்சரிக்கைச் சமிஞ்கைகளும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு பயந்து அன்று வாயடைத்திருந்த அநுர! இரகசியங்களை வெளிப்படுத்திய ஹரின் பெர்னாண்டோ
கைதினை தடுக்க வெளிநாட்டிலிருந்து பசில் எடுத்த அவசர முடிவு ! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு