நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவருக்கு அழைப்பாணை
தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மூவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடந்த 09.09.2024 திங்கட் கிழமை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிரசார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல்
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் துண்டுப்பிரசுரங்களை பறிமுதல் செய்தனர்.
இதன்பிரகாரம் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சற்குணதேவி ஜெகதீஸ்வரன், செல்வராசா உதயசிவம் ஆகிய மூவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றம் வருமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
