சுமந்திரன் - சிறீதரனுக்கு எழுதிய கடிதத்தில் மறைந்துள்ள உண்மைகள்
சுமந்திரன் சிறீதரனுக்கு எழுதிய கடிதத்தில் மறைந்துள்ள உண்மைகள் பற்றி அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் கருத்து தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் நடைபெற்ற நாளன்று சீறிதரனும் சுமந்திரனும் திரைக்கு பின்னால் கதைக்கும் போது சீறிதரன் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் கூறியதாகவும், அப்படி இருக்க வேண்டும் என்றால் சுமந்திரனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்க தான் கேட்டதாகவும் அதற்கு சுமந்திரன் இணங்கியதாகவும் அவருடைய கடிதத்தின் முதலாவது பந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் பிரச்சினைக்குரிய முன்னெடுப்பு. வாக்களருக்கு தெரியாமல் தேர்தலுக்கு முன்னாள் திரைக்கு பின்னால் டீல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தேர்தல் என்று வரும் போது கட்சியில் அனைவருக்கும் சமனான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
