மட்டக்களப்பில் 38 பேர் தவறான முடிவெடுத்து மரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த (16.04.2023) தொடக்கம் இன்று (17.04.2023) வரை காலை 6 மணிவரையிலான 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த ஜனவரி(1.1.2023) திகதி தொடக்கம் மார்ச் (31.03.2023)ஆம் திகதி வரையான 3 மாதத்தில் 17 வயது சிறுவர் தொடக்கம் 76 வயது வரையிலான ஆண் பெண் உட்பட 38 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மணித்தியாலயத்தில் மூவர் தற்கொலை
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் 27 வயதுடைய இளைஞன் நேற்று (16.04.2023) மாலை வீட்டின் அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் 76 நபர் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி களுவங்கேணி மயானத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மூன்று மாதங்களில் 38 பேர் தற்கொலை
மேலும், குறிப்பிட்ட பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி எல்லை பகுதியில் அம்பகஸ்கவ பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் நேற்று இரவு அறையொன்றின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடந்த 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் கடந்த ஜனவரி தொடக்கம் 38 பேர் தற்கொலை
செய்துள்ளதாகவும் அண்மைகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 2 மணி நேரம் முன்

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam
