மட்டக்களப்பில் அதிபர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் - உடனடி நடவடிக்கை
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரியும், ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யக்கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, நேற்று(11.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்த கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
போராட்டக்களத்தில் இறங்கிய பாடசாலை மாணவர்கள்
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நேற்றைய தினம்(11) காலை பாடசாலையின் முன் வாயிலை மூடி மாணவர்கள், பாடசாலைக்குள் செல்லாமல் அதிபரின் இடமாற்றத்தை ரத்து செய்யக் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆசிரியர்களை பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு பெற்றோர்கள் கல்வி திணைக்களத்திற்கு தெரிவித்த போது எந்தவித நடவடிக்கைளும் எடுக்கவில்லை.
ஆனால் அதிபர் மீது குற்றச்சாட்டு வந்தபோது விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தற்காலிகமாக பதில் அதிபர் இடமாற்றம்
பாடசாலையின் நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே செல்லவில்லை. இதனால் பாடசாலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பாடசாலையில், தற்போது பதில் அதிபர் பொறுப்பிலுள்ளவருக்கெதிராக அலுவலக மட்ட விசாரணை நடைபெற்று வருவதனால் விசாரணை முடியும் வரை அவர் தற்காலிகமாக வேறு பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவாக சுமுகமான தீர்வு காணப்படுமென்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாடசாலை வாயில் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் கையொப்பம் இட்ட பின்னர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

