குளியலறையில் குழந்தையை பெற்றெடுத்த மாணவி-திஸ்ஸமஹாராமவில் சம்பவம்
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 ஆம் ஆண்டில் பயிலும் 16 வயதான மாணவியே இவ்வாறு குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குழந்தை அழும் சத்தம் கேட்டு கதவை திறந்த தாய்

வீட்டின் குளியலறையில் குழந்தை அழும் சத்தத்தை கேட்டுள்ள மாணவியின் தாய், கதவை திறந்து பார்த்த போது தனது மகள் குழந்தையை பெற்றெடுத்திருப்பதை கண்டுள்ளார்.
இதனையடுத்து தாய், மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பாக நேற்று திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
காதல் தொடர்பு அல்லது வன்புணர்வு காரணமாக மாணவி கர்ப்பமடைந்தாரா என்பதை கண்டறிய திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam