வவுனியா இ.போ.ச சாலையினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை (Photos)
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி மற்றும் நடத்துனர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு எதிராகவும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை நேற்றைய (12.05.2023) தினம் முன்னெடுத்திருந்தனர்.
இப் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இதன்போது “இ.போ.ச சாரதி மற்றும் நடத்துனர்கள் மீது தனியார் பேருந்தினர் தாக்குதல்
மேற்கொள்ளவது தற்போது அதிகரித்து காணப்படுவதும், நீதிமன்றில் பல வழக்குகள் தீர்வின்றி காணப்படுகின்றதும் ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது மற்றும் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இ.போ.ச.வவுனியா சாலையினர் பணிப்புறக்கணிப்பை“ முன்னெடுத்துள்ளனர்.
இடமாற்ற கோரிக்கை
இதேவேளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை தனியார் பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரமின்றி ஏற்றிச்செல்வதுடன் இ.போ.ச வவுனியா சாலை பேருந்து நேரசூசியில் வவுனியா - சாலம்பைக்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றிச்செல்வது தொடர்பில் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் பொலிஸாரை இடமாற்ற கோரியும் இப்பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி மற்றும் நடத்துனர்களின் பணிப்புறக்கணிப்பை அடுத்து, பிரதி பொலிஸ்மா அதிபர் “உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்“ என உறுதி வழங்கியதையடுத்து பணிப்புறக்கணிப்பானது நேற்றையதினமே கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |








