தீவிரமடையும் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள்- செய்திகளின் தொகுப்பு
சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் மூன்று கட்சிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
நேற்று மாலை முதலாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்து உரையாடியுள்ளது. அதன்போது அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி சாதகமான பதில் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான நவலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
அத்துடன் தற்போதைக்கு சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஒரே கட்சியாகவும் குமார வெல்கமவின் கட்சி செயற்படுகின்றது.
அத்துடன் ஜனாதிபதித் தெரிவின் போது குமார் வெல்கம நேரடியாக ரணிலை ஆதரித்து கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரது கட்சியினரும் நாடாளுமன்ற மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam