தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தும் ஸ்டாலின்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ( MK Stalin )மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கட்சிக் கூட்டத்தின்போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் முன்வைப்பு
இலங்கை கடற்படையால் சிறைகளில் வாடும் கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும், நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் இதன்போது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
குறித்த கட்சிக் கூட்டத்தில், இந்தியத் திணிப்பு தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்களை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
