தமிழர்களுடன் தோளோடு தோள் நிற்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
தமிழர்களுடன் தோளோடு தோள் நிற்குமாறு பிரித்தானிய அரசாங்கத்தை தாம் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த குற்றங்களை செய்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் லாம்மி கூறியுள்ளார்.
மேலும் இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள சமூகங்களுடன் இணைந்து, இலங்கையின் தமிழ் சமூகத்துக்கான அமைதி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப உதவ முடியும் என்றும் ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



