ஹர்ஷ டி சில்வாவை நம்ப மறுக்கும் சஜித்: டயானா பகிரங்கம்
எதிர்க்கட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஹர்ஷ டி சில்வா மீது நம்பிக்கை இல்லாததால், சஜித் பிரேமதாச பொது நிதி தொடர்பான குழுவில் அமர விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று (01.07.2023) உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி
பொதுநிதி தொடர்பான குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளே கோரின.
இதன்படி அந்த இடத்திற்கு ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டார்.
இப்போது, எதிர்க்கட்சித் தலைவரும் குழுவில் அமர விரும்புகிறார் என்று டயானா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதியின் காலினை இழுக்காமல், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான அவரின் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று டயானா கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |