"இலங்கையில் பல இலட்சங்களால் எகிறிய விமானச்சீட்டுகள்! மோசமடையும் விமான நிலைய எதிர்காலம்"
இலங்கையில் ஏற்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் பிரச்சினையை இலங்கை விமான நிலையம் மீளக் கட்டமைக்கும் நிலைக்கு வரவில்லை என்றால் இலங்கை விமான நிலையம் பெரும் சிக்கலை எதிர்நோக்கும் என முன்னாள் வங்கி முகாமையாளரும் பல நிறுவனங்களுக்கான பொருளாதார மற்றும் முகாமைத்துவ ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசியிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முன்னர் 80 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வரை இருந்த விமான டிக்கட்கள் இப்பொழுது 4 அரை லட்சம் தொடக்கம் 6 அரை லட்சம் வரை தேவைப்படுகிறது. இந்நிலை இலங்கையின் பொருளாதார பிரதிபலிப்பே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.