பெரும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மாறக்கூடும்
ஸ்ரீலங்கன் விமான சேவையானது முறையான திட்டத்தினூடாக நிர்வகிக்கப்பட்டால் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற முடியும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
செலவீனங்களைக் குறைப்பதன் மூலம் தேசிய விமான நிறுவனம் எதிர்காலத்தில் இலாபம் ஈட்டுவதை உறுதிப்படுத்த முடியும் என அழைப்பாளரான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நஷ்டத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல என்றும், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
உணவு வழங்கல், விமான சேவைகள் மற்றும் தரை கையாளுதல் அலகுகள் இலாபத்தை ஈட்டுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல்வாதிகளின் ஒப்பந்தங்கள் மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள் மூலம் விமான நிறுவனம் உள்ளே ஊழல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் 24 விமானங்களை தொடர்ந்து பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும், விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக வருடாந்தம் இதேபோன்ற ஏனைய விமான நிறுவனங்களை விட ரூ.40 பில்லியன் அதிகமாக செலவழிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri