பெரும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மாறக்கூடும்
ஸ்ரீலங்கன் விமான சேவையானது முறையான திட்டத்தினூடாக நிர்வகிக்கப்பட்டால் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற முடியும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
செலவீனங்களைக் குறைப்பதன் மூலம் தேசிய விமான நிறுவனம் எதிர்காலத்தில் இலாபம் ஈட்டுவதை உறுதிப்படுத்த முடியும் என அழைப்பாளரான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நஷ்டத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

விமான நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் அல்ல என்றும், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் தலையீட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
உணவு வழங்கல், விமான சேவைகள் மற்றும் தரை கையாளுதல் அலகுகள் இலாபத்தை ஈட்டுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல்வாதிகளின் ஒப்பந்தங்கள் மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள் மூலம் விமான நிறுவனம் உள்ளே ஊழல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்சில் பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் 24 விமானங்களை தொடர்ந்து பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும், விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்காக வருடாந்தம் இதேபோன்ற ஏனைய விமான நிறுவனங்களை விட ரூ.40 பில்லியன் அதிகமாக செலவழிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam