மோசமான வானிலை: வெள்ளப்பெருக்கு தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
அதிக மழை வீழ்ச்சி காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி, அத்தனகலு, கிங், பென்தர ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 50 மி.மீ மழை பெய்துள்ளதாகவும், களு கங்கைப் பகுதியே மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் கூறியுள்ளது.
அதன்படி, களு கங்கையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்மட்டம் அதிகரிப்பு
களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக, இரத்தினபுரி, மில்லகந்த மற்றும் அல்லகாவ பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், வெள்ளப்பெருக்கை எட்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri