பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்வது குறித்து பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் கோவிட் பெருந்தொற்று நிலைமையின் காரணமாக, பரீட்சை திணைக்களத்திற்கு நேரில் செல்லாமல் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் முறைமை ஒன்றை இவ்வாறு அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பிலான முறைமையை தெளிவுபடுத்தும் வகையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் (www.doenets.lk ) அல்லது அதிகாரபூர்வ அலைபேசி செயலயான DoE இல் பிரவேசித்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.