பாடகர் சங்கீதன் கைது தமிழர்கள் மீதான இனவாதமே..! சிறிதரன் குற்றச்சாட்டு
இலங்கை நாட்டின் அரசுகள் மாறினாலும், தமிழர்கள் மீதான இனவாதம் முடிவுக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழர் பகுதியில் தாயக எழுச்சி பாடலை எடிட் செய்து பாடிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் மீதான இனவாதம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நாட்டில் ஆட்சியாளர்கள் மாறினாலும், தமிழர்கள் மீதான இனவாதம் மாறவில்லை. இதனை இன்றும் உறுதிப்படுத்தும் வகையில், கிளிநொச்சியில் தாயக எழுச்சி பாடலை பாடிய இளைஞர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

என்னதான் இவர்கள் இனவாதம் இல்லையென கூறினாலும், தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
இலங்கையில் நிலவும் வீழ்ச்சி பொருளாதாரம் காரணமாக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தங்களின் வாழ்க்கையை தொடரும் நிலை உள்ளது. இது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.
எது எப்படி இருப்பினும், தமிழர்கள் மீதான் இனபடுகொலைகளுக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அதுவரையில் நாமும் குரல் கொடுப்போம் என்றார்.