57 நாடுகளுக்கு இலங்கையர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்
வெளி நாடுகளுக்கு கண் தானம் வழங்குவதற்கு இலங்கையர்கள் பாரியளவில் பங்களிப்பு செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 28 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 57 நாடுகளைச் சேர்ந்த 1,767 பேருக்குப் பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதயாராச்சி கூறியுள்ளார்.
இலங்கை கண் மருத்துவ சங்கம்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் ஒரு கண் அல்லது இரண்டு கண்களாலும் பார்க்க முடியாத எந்தவொரு நபருக்கும் இலங்கை கண் மருத்துவ சங்கம் இலவசமாக கண்களை வழங்க முன்வருவதாகவும் ஜகத் சமன் மாதயாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
