இந்தியக் கடற்பரப்பில் இரு இலங்கையர்கள் கைது
இந்தியக் கடற்பகுதியில் நின்ற படகில் இருந்த இரண்டு இலங்கையரை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
இரண்டு இலங்கையர்கள்
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார் , சிந்துஜன் ஆகிய இரண்டு பேரும் பைபர் படயில் இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர்.
அப்போது பைபர்படகு இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவின் வேதாரண்யத்தை அண்டிய கடல் பகுதியில் இரண்டு இலங்கையர்களுடன் நின்றுள்ளது.

ட்ரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால்...இந்தியா மீது இரண்டாம் கட்ட வரி! மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
பல்வேறு கோணத்தில் விசாரணை
அந்த வழியாக வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து ஆறுகாட்டுத்துறை பகுதி கடற்றொழிலாளர்கள் படகையும் இரண்டு இலங்கையர்களையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இரண்டு பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழு பொலிஸார் கைது செய்து இவர்கள் மீன்பிடிக்க வந்தனரா? அல்லது கடத்தலுக்காக வந்தார்களா? என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்- ராகேஷ்




