வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் சிலரின் நியாயமற்ற செயல்
சில திறமையான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் இலங்கைக்கு எந்தவொரு டொலரையும் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சில டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் அது நாட்டுக்கு நல்லது என நான் நினைக்கிறேன்.
வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் நாட்டுக்கு இழைக்கும் அநீதி

சில திறமையான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் இலங்கைக்கு எந்தவொரு டொலரையும் அனுப்புவதில்லை, அது நியாயமில்லை.
உதாரணமாக மருத்துவரைப் போன்ற ஒரு நிபுணரை உருவாக்க அரசாங்கத்தால் பெரும் தொகை செலவிடப்படுகிறது.
சில சமயங்களில், அவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று, தங்கள் குடும்பத்துடன் இடம்பெயர்கிறார்கள், ஆனால் அவர்கள் எந்தவொரு டொலரையும் அனுப்புவதில்லை.
இலவசக் கல்வியைப் பெற்றவர்கள் என்ற வகையில் அவர்கள் தமது நாட்டுக்கு இழைப்பது பெரும் அநீதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam