கனடா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு படையெடுக்கும் இலங்கை மாணவர்கள்
உலகளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்கள் மீது இலங்கை மாணவர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்விக்காக சேரும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதியில் 19,000க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இணைந்துள்ளனர்.
சர்வதேச கல்வி ஒத்துழைப்புகள்
கடந்த சில ஆண்டுகளில் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கு இடையிலான சர்வதேச கல்வி ஒத்துழைப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் செயல்முறை தொடர்பான புள்ளிவிவரங்கள் சாதனை அதிகரிப்பைக் காட்டியுள்ளன.
அதற்கமைய, 2022 மற்றும் 2023ஆம் கல்வியாண்டில், சுமார் 5,500 மாணவர்கள் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இணைந்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டை விட 84 சதவீத அதிகமாகும். 2019 முதல் 2023 ஆம ஆண்டுக்கு இடையில் 8,075 இலங்கை மாணவர்கள் உயர்கல்விக்காக கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
மாணவர்களுக்கு உதவித்தொகை
எனினும் குறைந்த எண்ணிக்கையிலான இலங்கை மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்காக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏராளமான இலங்கை மாணவர்கள் ஜப்பான் மற்றும் மலேசியாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
விசேடமாக இலங்கை மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் குறுகிய பயிற்சி திட்ட வாய்ப்புகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சீனாவிற்கான இலங்கை தூதர் குய் ஜென்ஹோங் தெரிவித்தார்.



