ஆட்சிக்காக சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சினையை எழுப்ப வேண்டாம்! பிள்ளையான் விடுத்துள்ள எச்சரிக்கை (Video)
70 ஆண்டுகள் நீடிக்கின்ற இந்த பிரச்சினையிலே அரசியலுக்காக அல்லது ஆட்சியை பிடிப்பதற்காக வருகின்ற தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் துவேசத்தை கிளப்பிவிட்டால் மீண்டும் பிரச்சினைகள் எழுமே தவிர தீர்வு கிடைக்காது என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“கடந்த காலங்களில் தமிழர்களிடம் ஒற்றுமையில்லை என்கிற பெரிய பிரச்சினையொன்று இருந்து வந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் தமிழரசுக் கட்சி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து பேசுவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன நடந்தது என்பது தொடர்பில் எந்த வெளிப்படுத்தலும் இல்லை” என்றார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்தித்தொகுப்பு,