லெபனானில் 10 நிமிடங்களில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல் - காயமடைந்த இலங்கை பெண்
லெபனான் மீது நேற்று (08) இஸ்ரேல் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள இலங்கைத்தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
லெபனானில் 10 நிமிடங்களில் 100 முறை தாக்குதல் - அதிரடி காட்டும் இஸ்ரேல்! வெளியான பதைபதைக்கும் காணொளிகள்
இஸ்ரேல் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்
குறித்த பெண் லேசான காயங்களுடன் தப்பியதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
லெபனான் மீது 10 நிமிடங்களுக்குள் இஸ்ரேல் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும்,1,165 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, "லெபனான் முழுவதும் இன்று அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான மரணம் மற்றும் அழிவுகளால் நாங்கள் மிகுந்த சீற்றம் அடைந்துள்ளோம்" என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO