இலங்கை அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன்
இந்த ஆண்டின் (2024) முதல் நான்கு மாதங்களில் அரசாங்கம் 796.5 பில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு வெளியிட்டுள்ள மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் கடன் சேவை மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக உள்நாட்டு கடனாக 734.2 பில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு திட்டக்கடனாக பெறப்பட்ட தொகை 62.3 பில்லியன் ரூபாய் ஆகும்.
உள்நாட்டு கடனுக்கான வட்டி
மேலும், 2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் உள்நாட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக 692.1 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டுக் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகை 34 பில்லியன் ரூபா ஆகும்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், நாட்டின் கடன்களில் தோராயமாக 92.2 சதவீதம் உள்நாட்டிலிருந்து பெறப்பட்டவை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
