வடக்கிற்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடு:வெளிவரும் அதிர்ச்சி தகவல்-செய்திகளின் தொகுப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவிற்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக சந்தேகிப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழர் விரோத மனப்பான்மை கொண்ட சீனா வடக்கிலும் கிழக்கிலும் தனது செல்வாக்கை அதிகரிக்கும் தீய நோக்கத்துடன் எமது கடலையும் நிலத்தையும் அபகரித்து எமது பாரம்பரிய மண்ணில் எம்மை அகதிகளாக்கி இனப்படுகொலை செய்யும் முயற்சிகளை நாம் ஏற்கனவே கண்டித்திருந்தோம் என குறிப்பிட்டுள்ளனர்.