அமைச்சுப் பொறுப்பை வேறொருவருக்கு வழங்கத் தயாராகும் அமைச்சர்
தற்போது நான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகி நாட்டுக்கு ஆதரவாக வருவோருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக உள்ளேன் என பௌத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெரிய அமைச்சரவை நாட்டுக்கு உதவவில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் ஏற்கனவே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம். அமைச்சரவையில் பல கட்சிகள் உள்ளன, மற்றவர்களும் பங்கேற்க வேண்டும். நாங்கள் எங்கள் அமைச்சுப் பதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

மற்றவர்கள் வந்தால் எனது அமைச்சுப் பதவியை நான் கைவிடத் தயாராக இருக்கின்றேன். பெரிய அளவிலான அமைச்சரவைகள் நாட்டுக்கு உதவவில்லை.
எனவே, தற்போது நான் வகிக்கும் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டு நாட்டுக்கு ஆதரவாக வருவோருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக உள்ளேன் என குறிப்பிட்டார்.
you my like this video
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam