அவசரமாக இந்தோனேசியாவுக்கு அனுப்பட்டுள்ள இலங்கை விமானம்
புதிய இணைப்பு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மேடன் விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கிய விமானத்தில் பயணித்தவர்களை திருப்பி அனுப்ப கட்டுநாயக்கவிலிருந்து மற்றொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளது.
இன்று (06) பிற்பகல் 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து UL 302 விமானம் புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பு மேலாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த விமானம் சுமத்ரா தீவில் உள்ள மேடன் விமான நிலையத்தில் தரையிறங்கி, அதன் பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சிங்கப்பூருக்குப் புறப்பட உள்ளது.
முதலாம் இணைப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 01.45 மணிக்கு சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடன் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
93 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஏ320 விமானம் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த விமானத்தை விமானப் பொறியாளர்கள் சரிசெய்ய வேண்டும் என்று மேடன் விமான நிலையம் கோரியுள்ள நிலையில், அவர்கள் கோரிக்கையை நிராகரித்து, அதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என்று பணியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை நிராகரிப்பு
இந்நிலையில், மேடன் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட விமானத்திலிருந்து பயணிகளை இறக்கி, விமான நிலையத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப அனுமதி வழங்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணிகளை வேறு விமானம் மூலம் சிங்கப்பூருக்கு மாற்றுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விடுத்த கோரிக்கையையும் மேடன் விமான நிலைய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இந்தப் பின்னணியில், இலங்கை அரசாங்கம், இலங்கை விமான நிறுவனம் மற்றும் இந்தோனேசிய அரசாங்கம் ஆகியவை இந்தப் பயணிகளை மேடன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் 1.45 மணியளவில், தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம், விமானத்தை பழுதுபார்ப்பதற்குத் தேவையான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு விமானப் பொறியாளர்கள் குழுவுடன் மேடன் விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.
மேடன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்போது தங்கியுள்ள பயணிகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல புறப்படும் விமானமும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உள் தொடர்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இரு வாரங்களுக்குள் அநுர அரசு திட்டமிட்டிருக்கும் அதிரடி நடவடிக்கை! சிறைக்குச் செல்லப்போகும் முக்கியப்புள்ளி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
